LATEST NEWS
“அவ என் ஆளு…” கல்யாண மண்டபத்தில் ட்விஸ்ட் கொடுத்த மர்ம நபர்.. எஸ்கேப் ஆன மணமகன்.. நடுரோட்டில் மாப்பிள்ளையைத் துரத்திய மணமகள் குடும்பம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
ஹரியானா மாநிலம் கைத்தல் பகுதியில், திருமண மேடையில் இருந்து மணமகன் திடீரென ஓட்டம் பிடித்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு நடைபெற்ற திருமண சடங்குகளின் போது, மணமகனின் செல்போனுக்கு அடையாளம் தெரியாத ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், மணமகன் திருமணம் செய்யவிருக்கும் பெண் தனது முன்னாள் காதலி என்று கூறியதுடன், அது தொடர்பான சில புகைப்படங்களையும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.
हरियाणा के कैथल में शादी के मंडप से दूल्हा अचानक भागा, रिपोर्ट्स के अनुसार, कैथल में शादी समारोह के दौरान दूल्हे को एक अनजान नंबर से फोन आया।
कॉल करने वाले ने दावा किया कि जिस लड़की से उसकी शादी हो रही है, वह उसकी एक्स है, और कुछ फोटो भी व्हाट्सएप पर भेज दिए।
बताया जा रहा है… pic.twitter.com/dcTtjNGOJp— Mandeep RajBhar (@MandeepRajBhar9) July 7, 2026
அந்தப் புகைப்படங்களைப் பார்த்த அதிர்ச்சியில், மணமகன் மண்டபத்தை விட்டே அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளார். இதைத் தொடர்ந்து, என்ன நடக்கிறது என்று புரியாமல் மணமகள், அவரது குடும்பத்தினர் மற்றும் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் என அனைவரும் மணமகனைத் துரத்திக் கொண்டு பின்னாடியே ஓடினர். இந்த ஒட்டுமொத்த சம்பவத்தின் பதற்றமான மற்றும் சுவாரசியமான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகின்றன.
