LATEST NEWS
பிரேக் எதுனே தெரியாம கார் ஓட்டுவதா..? டிரைவிங் பழகிய பெண்ணின் அலட்சியம்..! 5 மாணவர்களின் மீது கொடூரமாக மோதிவிட்டுத் தப்பிய பெண்..!!
கிரேட்டர் வெஸ்ட் பகுதியில் உள்ள ‘பஞ்சஷீல் கிரீன்ஸ்-2’ குடியிருப்பு வளாகத்தின் நுழைவாயில் அருகே புதன்கிழமை காலை இந்த அதிர்ச்சி தரும் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்தச் சங்கத்தில் வசிக்கும் பெண் ஒருவர், தன் குழந்தைகளைப் பள்ளியில் விடுவதற்காகக் காரில் புறப்பட்டுள்ளார். அப்போது அவர் கார் ஓட்டப் பழகிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. குடியிருப்பு வாயிலை விட்டு வெளியே வந்தபோது, எதிர்பாராதவிதமாக காரின் கட்டுப்பாடு இழந்தது. பிரேக் போடுவதற்குப் பதிலாகப் பதற்றத்தில் ஆக்ஸிலரேட்டரை பலமாக மிதித்ததால், கார் அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்தது.
அதிவேகமாகச் சென்ற கார், முதலில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டி மீது மோதியது. அதோடு நிற்காமல், அங்கு பள்ளிப் பேருந்திற்காகக் காத்திருந்த ஐந்து பள்ளி மாணவர்கள் மீது கார் பலமாக மோதி ஏறியது. விபத்து நடந்தவுடன் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்து, காரின் அடியில் சிக்கியிருந்த குழந்தைகளைப் மீட்டனர். இந்த விபத்தில் ஐந்து குழந்தைகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு பத்திரமாக வீடு திரும்பினர். விபத்தை ஏற்படுத்திய பெண், சம்பவ இடத்திலிருந்து காரோடு தப்பியோடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளன
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிஸ்ராக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் அந்தப் பெண் மொபைல் போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாரா என்ற கோணத்திலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும் குடியிருப்புவாசிகளும், காலையில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் அங்கு முறையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துப் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்க அப்பகுதியில் வேகத்தடைகளும், பாதுகாப்பு காவலர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
