LATEST NEWS
“ரன்வே-வா.. இல்ல டாய்லெட்டா..?” இந்தியாவின் தூய்மையான நகர விமான நிலையத்தில் நடந்த கூத்து..! வைரல் வீடியோவால் கேள்விக்குறியான ‘வளர்ப்பு முறை’..!!
இந்தியாவின் மிக தூய்மையான நகரமாகத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வரும் இந்தூரில் உள்ள விமான நிலையத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ஓடுதளத்தில், விமானத்திற்கு மிக அருகில் ஒரு சிறுவன் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் மிகவும் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், அந்த சிறுவனின் பெற்றோர் அவனைத் தடுக்காமல், அருகில் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ‘சாய் சுட்டா பார்’ நிறுவனத்தின் இணை நிறுவனரான அனுபவ் துபே என்பவர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பொது ஒழுக்கம் மற்றும் வளர்ப்பு முறை குறித்த புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. வீடியோவை வெளியிட்ட அனுபவ் துபே, இதில் அந்த சிறுவன் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், பெரியவர்கள் செய்வதைப் பார்த்துதான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நம் நாட்டில் ஆண்கள் பொது இடங்களில் எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழிப்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது என்றும், விஐபி மற்றும் பாதுகாப்பு நிறைந்த விமான நிலையப் பகுதியிலேயே இப்படி நடப்பது வெளிநாட்டுப் பயணிகளிடையே நாட்டின் மதிப்பைத் தவறாகக் காட்டும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/reel/DaaMifUs3yf/?utm_source=ig_web_button_share_sheet
நாட்டின் தூய்மையை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு கழிப்பறைகளைக் கட்டினாலும், மக்களின் சிந்தனையில் மாற்றம் வராதவரை உண்மையான ‘தூய்மை இந்தியா’ கனவு சாத்தியப்படாது என்று இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே பொது ஒழுக்கத்தையும், பொது இடங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் கற்றுக்கொடுக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்று பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
