LATEST NEWS
சினிமாவை விட்டு விலகும் நடிகை சாய் பல்லவி…. அடுத்த பிளான் என்ன?…. அவரே கொடுத்த விளக்கம்….!!!!

தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி. என்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் தியா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடிக்க தொடங்கினார்.
இவரரின் நடிப்பில் அண்மையில் வெளியான கார்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கௌதம் ராமச்சந்திரன் இயக்கிய இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி உடன் காளி வெங்கட், ஆர் எஸ் சிவாஜி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சாய் பல்லவி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு மருத்துவராக செட்டிலாக மருத்துவமனை கட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்தது. இதற்கு தற்போது பதில் அளித்துள்ள சாய் பல்லவி, நான் எம்பிபிஎஸ் படித்திருந்தாலும் நடிகையாக வேண்டும் என்பதே எனது ஆசை. பெற்றோர்களும் அதற்கு சம்மதித்து விட்டனர். எனது கதாபாத்திரங்களை பார்வையாளர்கள் விரும்ப வேண்டும். நல்ல கதைகள் அமைந்தால் எந்த மொழியிலும் நடிப்பதற்கு நான் தயார் என்று கூறி வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.