CINEMA
துபாயில் இருந்து கதறியபடி ஓடிவந்த ஏகே…”எங்க இதயமே போயிருச்சு…தாயின் உடலைத் தோளில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம்… பார்ப்பவர் நெஞ்சை உலுக்கும் பெசன்ட் நகர் மின்மயானக் காட்சிகள்…!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்குத் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் நேரில் வந்து தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். கார் ரேஸிங் பயிற்சிக்காக துபாயில் இருந்த அஜித்குமார், தாயாரின் மறைவுச் செய்தியைக் கேட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார். அதன் பின்னரே இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
அஜித்தின் தாயார் மறைவுக்குத் தமிழக முதல்வர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான இரங்கல் கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், அஜித்தின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் விஜய், அஜித்தை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார். அவருடன் நடிகை த்ரிஷாவும் அஞ்சலி செலுத்த வந்திருந்தார். தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ராஜ்மோகனும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இந்த துயரமான சூழலில் அஜித்தின் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் குடும்பத்தின் இதயமாக விளங்கிய தாயாரின் பிரிவு ஈடு செய்ய முடியாத வெற்றிடம். இந்த கடினமான நேரத்தில் எங்கள் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இன்று காலை அஜித்குமாரின் இல்லத்தில் இருந்து அவரது தாயாரின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது சோகம் ததும்பும் முகத்துடன் நடிகர் அஜித் தனது தாயின் உடலைத் தோளில் சுமந்து வந்தக் காட்சி பார்ப்போர் நெஞ்சங்களை உருகவைத்தது. தொடர்ந்து நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் மோகினி மணியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் முறைப்படி செய்து முடிக்கப்பட்டன. தாயை இழந்து வாடும் அஜித் மற்றும் அவரது சகோதரர்களான அனில்குமார், அனுப்குமார் ஆகியோருக்கு ஒட்டுமொத்தத் திரை உலகினரும், ரசிகர்களும் தங்களது ஆறுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
