TRENDING
திருமணம் முடிந்த 2 மணிநேரத்தில் கொலைசெய்யப்பட்ட மாப்பிள்ளை..!! வீட்டு பின்புறத்தில் கண்ட பேரதிர்ச்சி..??வெளியான தகவல் ..

அமெரிக்காவில் இரண்டு நாட்களுக்கு முன்னாள் திருமணம் நடந்த இரண்டு மணி நேரத்தில் மணமகன் வீட்டு தோட்டத்தில் சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா , கலிபோர்னியாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் ஜோ மெல்கோசா (30) மற்றும் எஸ்தர் புஸ்டமண்டே என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் நடந்து உள்ளது . பிறகு மதியம் இருவருக்கும் திருமண வரவேற்புக்காக மணமகளின் சகோதரி வீட்டில் வரவேற்பு அழைப்பு நடை பெற்றது .
அப்பொழுது அந்த வரவேற்ப்பில் இரண்டு மர்ம நபர்கள் வந்து தகராறு செய்தனர். அப்பொழுது மணமகன் அந்த சண்டையை தடுத்து கொண்டு இருந்தார் அவர்களை அழைத்து கொண்டு வீட்டின் பின் புறத்திற்கு சென்றார்கள் அப்பொழது அந்த இருவரும் டென்னிஸ் பேட்டை கொண்டு மணமகனின் தலையில் ஓங்கி அடித்தார்கள் . அவரை பலமுறை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்கள் .அதனால் மணமகன் தலையில் ரத்தம் விழுந்து வந்த நிலையில் அவரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார்கள் .
அதில் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். மணமகனுக்கு 11 வயது மகள் லில்லி என்ற ஒரு மகளும் உள்ளாள். மற்றும் இரண்டு தம்பிகளும் உள்ளனர்.
இந்நிலையில் மணமகனை தலையில் அடித்து கொன்ற இரண்டு நபர்களும் கைது செய்து உள்ளனர். அவர்கள் இருவரும் அன்னான் தம்பிகள் ரோனி ரமிரீஸ் (28) மற்றும் அவன் தம்பி ஜோஸ் ரமிரீஸ் (19) . இருவரிடம் தீவிர விசாரணையை துவங்கியுள்ளனர் காவல்துறையினர் .
மேலும் மணமகனின் இறுதி சடங்கு மற்றும் அவரது குழதையின் எதிர்காலத்திற்காக அவரது உறவினர்கள் சிலர் GoFundMe என்னும் இணையத்தளம் மூலம் நிதி திரட்டுகிறார்கள். மணமகனின் சகோதரர் ஆண்டி வேலாஸ்குஸ் தன் அண்ணன் போல் ஒரு நல்லவர் யாரும் இருக்க முடியாது .அவருக்கு இப்படி ஒரு சாவு வரக்கூடாது அவர் மகளின் நிலை இனி என்ன ஆகப்போகிறது என்று தெரியவில்லை என்று மிகவும் கவலையோடு கண்ணீர்வடித்தார்.