LATEST NEWS
நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான் ….!ரத்தத்திலேயே ஊறிப் போய் இருக்கு…! வளர்ப்பு அப்படி சவுக்கடி கொடுத்த சின்மயி….!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகி களுள் ஒருவர் சின்மயி பின்னனி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மட்டும் தெலுங்கு சினிமாவில் பின்னனி குரல் கொடுப்பவராகவும் உள்ளார் .2014 ஆம் ஆண்டு நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவிந்திரனை திருமணம் செய்து கொண்டார்.திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் அண்மையில் இவருக்கு ஆண் ,பெண் என்று இரட்டை குழந்தை பிறந்தது .
இந்த புகைப்படத்தை அவர் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் . சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .இதனிடையே சின்மயி கர்பமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எதையும் பதிவிடவில்லை என்பதால், அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார் என்று வதந்தி பரவி வந்தது.
இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் வகையில் சின்மயி தனது இணையதள பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் தனது இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தையும் பதிவு செய்தார் .இந்நிலையில் இவரின் இந்த பதிவில் கமெண்ட் செய்த நபர் வாழ்த்துக்கள் வைரமுத்து சார் என்று பதிவிட்டார் . இந்த கமெண்டிற்கு பதிலளிக்கும் விதமாக சின்மயி காட்டமாக பதிலளித்துள்ளார் . அதில் இந்த புகைப்படத்தை நான் வெளியிட்டேன் .இதற்கு ,தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் இதனை பதிவிட்டுள்ளார்.
நான் எனது கர்ப்ப கால புகைப்படத்தை வெளியிடாதர்க்கு உண்மையான காரணம் உள்ளது .ஏற்கனவே எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் தான் புகைப்படத்தை வெளியிடவில்லை .பலாத்கார ஆதரவாளர் என்னை துஷ்பிரயோகம் செய்தவர் என் குழந்தைகளின் தந்தை என்று என்னிடம் கூறுகிறார். நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான் ரத்தத்திலேயே ஊறுனது, வளர்ப்பு அப்படி என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வீண்வன்மத்தை பெண்கள் மேல் திணிக்கும் நபர்களுக்கு சவுக்கு அடியாக இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
