LATEST NEWS
“இது என்னடா புது கூத்தா இருக்கு..” பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்.. ஆனா இங்க 2K கிட் நடத்துற கூத்தே வேற… செம வைரல் வீடியோ.. !!
ஒரு சிறிய குழந்தையும், ‘பாம்பு அண்ணனும்’ எந்தவித பயமும் இல்லாமல், அருகருகே அமர்ந்து மிகவும் நிதானமாக போனில் கார்ட்டூன் பார்க்கும் அரிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகப் பாம்பைக் கண்டால் அலறியடித்து ஓடும் மனிதர்களுக்கு மத்தியில், இந்தக் குழந்தை அந்தப் பாம்பைத் தனது நெருங்கிய நண்பனாகவே மாற்றிக் கொண்டுள்ளது. இருவரும் தங்களுக்குள் ஒரு புரிதலோடு, எந்தவொரு சலனமும் இன்றி போனில் ஓடும் கார்ட்டூன் காட்சிகளைத் தங்களது பாணியில் ரசித்துக்கொண்டிருப்பது பார்ப்போரை வியக்க வைக்கிறது.
இப்படியொரு நட்பை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா என்று சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்க்கும் நெட்டிசன்கள், அங்கு ஓடும் கார்ட்டூன் காட்சிகள் சுவாரசியமாக இருக்கிறதா அல்லது இவர்களது விசித்திரமான நட்பு சுவாரசியமாக இருக்கிறதா என்று நகைச்சுவையாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். குழந்தையின் கள்ளமில்லா அன்பும், அந்தப் பாம்பின் அமைதியான போக்கும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், விஷத்தன்மை கொண்ட உயிரினங்களுடன் குழந்தைகளை இப்படி நெருங்கவிடுவது ஆபத்தானது என்ற எச்சரிக்கையையும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.
