LATEST NEWS
“நேற்று நான் CM விஜய்யை சந்திக்கவே இல்லை” நடந்தது என்ன..? தலைமைச் செயலக சந்திப்பு குறித்து உண்மையை உடைத்த பாடகர் தெருக்குரல் அறிவு..!!
சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி நேற்று கைது செய்யப்பட்ட பிரபல ராப் பாடகர் ‘தெருக்குறள்’ அறிவு, தான் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யைச் சந்திக்கவில்லை என்றும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை மட்டுமே சந்தித்துப் பேசியதாகவும் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக, கைது நடவடிக்கைக்குப் பின் பாடகர் அறிவு நேரடியாகத் தலைமைச் செயலகத்திற்குச் சென்று முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியதாகப் பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்பதிவு அமைந்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, மாணவர்களின் நலன் மற்றும் ஜனநாயகம் குறித்துத் தனது கருத்துக்களை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளதாக அறிவு குறிப்பிட்டுள்ளார். “நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது வன்முறையை ஏவும் போக்கு முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது” என்பதை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் தான் நேரடியாகவும் திட்டவட்டமாகவும் எடுத்துரைத்ததாக அவர் தனது பதிவில் விளக்கியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகம் முன்பாக நீட் முறைகேடுகளைக் கண்டித்துத் தனிநபர் போராட்டத்தில் ஈடுபட்ட பாடகர் அறிவு நேற்று போலீஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சருடனான சந்திப்பு குறித்துப் பரவிய வதந்திகளுக்குப் பாடகர் அறிவே தற்பொழுது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
