LATEST NEWS
மிரட்டலான வில்லன் நடிகர் ஆனந்த்ராஜின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!!!

தமிழ் சினிமாவில் 90களில் மிரட்டலான வில்லனாக கொடிகட்டி பறந்தவர்தான் நடிகர் ஆனந்த்ராஜ். இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தாய் மேல் ஆணை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கினார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
வில்லனாக பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக காமெடி கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார். இவர் சமீபத்தில் பிரின்ஸ், நாய் சேகர் ரிட்டன்ஸ், இடியட் மற்றும் கோப்ரா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் பார்த்திராத ஆனந்த்ராஜின் அழகிய குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.