LATEST NEWS
“மாணவர்களை அடிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது” பாடகர் அறிவு குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட நிலையில் பேட்டி..!!
நீட் தேர்வை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் எனத் தலைமைச் செயலகத்திற்கு வெளியே ஆக்ரோஷமாக முழக்கமிட்டுப் போராடிய ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு, காவல்துறையினரால் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டார். அவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில், அவரைத் தற்பொழுது முதலமைச்சரைச் நேரில் சந்தித்துப் பேசுவதற்காகப் பாதுகாப்பு வாகனத்தில் அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாடகர் அறிவு, அமைதியான முறையில் உரிமைகளுக்காகப் போராடும் “மாணவர்களைக் காவல்துறையினர் அடிக்கக் கூடாது; அவ்வாறு மாணவர்களை அடிப்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமானது” என்று தவெக அரசின் இந்த அடக்குமுறைப் போக்கிற்கு எதிராகத் தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
