மோடி பிள்ளை பெற்றிருந்தால் அதோட அருமை அவருக்கு தெரிஞ்சிருக்கும்… ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பிரதமரை கடுமையாக விமர்சித்த கெஜ்ரிவால்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மோடி பிள்ளை பெற்றிருந்தால் அதோட அருமை அவருக்கு தெரிஞ்சிருக்கும்… ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பிரதமரை கடுமையாக விமர்சித்த கெஜ்ரிவால்..!!

Published

on

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்களை ஆம ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். அப்போது மாணவர்கள் மீதான போலீசாரின் தடியடியைக் கடுமையாகக் கண்டித்த அவர், நாட்டின் எதிர்காலமாக விளங்கும் நம் குழந்தைகளான மாணவர்களை இப்படி அடிப்பது முற்றிலும் தவறானது என்று கூறினார்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த கெஜ்ரிவால், “மோடிக்கு சொந்தமாக குழந்தைகள் இல்லை, அதனால் தான் அவருக்குப் பிள்ளைகளைப் பற்றியும், பெற்றோர்களின் வலி பற்றியும் தெரியவில்லை” என்று சாடினார். மேலும், நியாயம் கேட்டு அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தி, அவர்களின் மீது பொய் வழக்குகளும், எஃப்.ஐ.ஆர் -களும் பதிவு செய்யப்பட்டுள்ளது மிகவும் வெட்கக்கேடானது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Advertisement

மாணவர்களின் இந்த எழுச்சிமிக்கப் போராட்டத்தைப் பாராட்டிய கெஜ்ரிவால், அவர்கள் தொடர்ந்து உறுதியுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். “மாணவர்களே, எப்பேர்ப்பட்ட பெரிய சர்வாதிகாரியாக இருந்தாலும், மக்கள் சக்தியின் முன் ஒரு நாள் நிச்சயம் அடிபணிய நேரிடும்” என்று கூறிய அவர், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆம ஆத்மி கட்சி சார்பில் தேவையான அனைத்து சட்ட மற்றும் மருத்துவ உதவிகளும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in