LATEST NEWS
பிரதமர் மோடி அவர்களே.! இந்த நாடு என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா..? அதிகாரத்தை வச்சு அடக்கப் பாக்குறீங்களா..? பிரதமர் மோடியை கிழித்து தொங்கவிட்ட கெஜ்ரிவால்..!!
டெல்லியில் நடைபெற்ற முக்கிய அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியையும் மத்திய பாஜக அரசையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். மத்திய அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தைத் தவறான வழிகளில் பயன்படுத்தி ஆட்சி நடத்துவதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் குரல்களையும் நசுக்கப் பார்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் அடக்குமுறைகள் மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி ஆவேசமாகப் பேசிய கெஜ்ரிவால், “இந்த ஜனநாயக நாடு இந்த நாட்டு மக்களுக்கு மட்டுமே சொந்தமானது; இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல, பிரதமர் மோடி!” என்று மிக ஆக்ரோஷமாகத் தாக்கிக் பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை முடக்க நினைக்கும் மத்திய அரசின் போக்கிற்கு எதிராக ஆம் ஆத்மி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அதிரடியான மற்றும் கடுமையான விமர்சனம் தேசிய அரசியல் களத்திலும், சமூக வலைதளங்களிலும் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கெஜ்ரிவாலின் இந்த பேச்சுக்கு பாஜக தரப்பில் இருந்து தற்பொழுது கடுமையான எதிர்ப்புகளும், அரசியல் ரீதியான பதிலடிகளும் வரத் தொடங்கியுள்ளன.
