LATEST NEWS
திருமணத்திற்குப் பிறகு அதில் மட்டும் கவனம் செலுத்தும் மகாலட்சுமி ரவீந்தர்…. போட்டோவை பார்த்து வாயை பிளந்த நெட்டிசன்கள்….!!!!
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் மகாலட்சுமி வயிற்றைப் பார்த்து கர்ப்பமாக இருக்கிறார் என செய்தி வைரலான நிலையில் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுட்டிங் சென்று சாப்பாடு சாப்பிடும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தனர்.
இந்நிலையில் விளம்பரத்திற்காக புது வகையான சேலைகள் மற்றும் அணிகலன்களையும் விளம்பரம் செய்து காசு பார்த்து வருகிறார் மகாலட்சுமி. தற்போது அதையே முழு வீச்சாக பார்த்தும் மறுபக்கம் சீரியலில் நடித்தும் வருகின்றார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
