CRIME
“அய்யோ.. கையில் ஆயுதம், முகமூடி..!” சிசிடிவி கேமராவையே அடித்து நொறுக்கி.. கதவை உடைக்க முயன்ற மர்ம நபர்… அலறி அடித்து எழுந்த பொதுமக்கள்.. நாமக்கல் அரங்கேறிய திடுக்கிடும் திருட்டு சம்பவம்..!!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கைகோளார் தெருவில் நேற்று முன்தினம் இரவு முகத்தை முழுவதுமாகத் துணியால் மூடியவாறு, கையில் ஆபத்தான ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர் ஒருவர் வீடுகளில் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் பூட்டை உடைக்க முயன்றதுடன், தனது அடையாளம் சிசிடிவியில் பதிவாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அங்கிருந்த சிசிடிவி கேமராவையும் ஆயுதத்தால் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளார். இந்த விவரிக்க முடியாத சத்தத்தைக் கேட்டு வீடுகளிலிருந்து வெளியே வந்து பொதுமக்கள் ஒன்று கூடுவதைக் கண்ட அந்த மர்ம நபர் அங்கிருந்து உடனடியாகத் தப்பியோடிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள், அருகில் இருந்த மற்றொரு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த மர்ம நபர் வீடுகளில் திருட முயன்றதும் பொருட்களைச் சேதப்படுத்தியதும் தெளிவாகப் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள பரமத்தி வேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள மர்ம நபரை விரைந்து கைது செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
