LATEST NEWS
செந்தில் பாலாஜி எங்க இருக்கார்ன்னே தெரியல… தினமும் ரூ.300 கோடி.. மக்கள் பணத்தை கொள்ளையடிச்சிட்டு ஏன் ஓடி ஒழியனும்..? அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி…!!
அமைச்சர் C.T.R. நிர்மல்குமார், செந்தில்பாலாஜியின் தற்போதைய நிலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், செந்தில்பாலாஜி எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத நிலை நிலவுவதாகவும், இப்படி ஒரு நபர் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியம் தேவையா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், டாஸ்மாக் பார்கள் அனைத்தையும் செந்தில்பாலாஜியே ஏலத்தில் எடுத்து, அதன் மூலம் தினமும் ரூ.300 கோடி வரை சம்பாதிக்கத் திட்டமிட்டதாக குற்றம்சாட்டினார். மக்கள் பணத்தை ஏன் இவ்வாறு கொள்ளையடிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்த பிறகு ஏன் பயந்து ஓட வேண்டும் என்றும் அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
