LATEST NEWS
“நீங்கள்தான் நாளைய PM” பேரவையில் CM விஜய்யை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் சரத்குமார்.. “அடுத்த 50 வருஷம் தவெக ஆட்சிதான்” என சூளுரை..!!
சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மீதான விவாதத்திற்குப் பிறகு பேசிய அமைச்சர் சரத்குமார், தமிழக முதலமைச்சர் விஜய்யை வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார். “நேரம் காலம் பார்க்காமல் தமிழக மக்களுக்காக உழைத்து, எங்கள் இதயங்களில் நிரந்தர முதலமைச்சராக வீற்றிருக்கும் நீங்கள்தான், இந்தியாவின் நாளைய பாரத பிரதமர்” என்று அவர் மேடையில் பிரகடனப்படுத்தினார். அமைச்சரின் இந்த அதிரடியான பேச்சு சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த உறுப்பினர்களிடையே பெரும் கைதட்டலையும் வரவேற்பையும் பெற்றது.
தனது வாழ்த்துரையின் போது, முதலமைச்சர் விஜய் திரையுலகில் தடம் பதித்த முக்கிய காலகட்டங்களை அமைச்சர் சரத்குமார் நினைவு கூர்ந்தார். விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘கில்லி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘குஷி’, ‘தலைவா’ மற்றும் ‘சர்கார்’ உள்ளிட்ட திரைப்படங்களின் பெயர்களைத் தனது உரையில் சுட்டிக்காட்டி அவர் வாழ்த்திப் பேசினார். இந்தத் திரைப்படங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசிய விதம், முதலமைச்சரின் திரைப்பயணத்தையும் அவரது தற்போதைய அரசியல் எழுச்சியையும் ஒப்பிடும் வகையில் அமைந்திருந்தது.
மேலும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் எதிர்காலம் குறித்துப் பேசிய அமைச்சர் சரத்குமார், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பலத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார். வரும் காலங்களில் மாற்று சக்திகளுக்கோ அல்லது எதிர்க்கட்சிகளுக்கோ இங்கு இடமில்லை எனக் குறிப்பிட்ட அவர், அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தமிழகத்தில் தவெக ஆட்சி தான் தொடரும் என்று சட்டப்பேரவையில் மிக ஆக்ரோஷமாகச் சூளுரைத்தார்.
