LATEST NEWS
அய்யயோ..! “ஒரே நாள்ல இவ்ளோ இன்ப அதிர்ச்சி கொடுத்தா எப்படிங்க தாங்குறது?” அமைச்சர் ஷாஜஹான் பேச்சால் வாய்விட்டு சிரித்த சபாநாயகர்..!!
“ஒரே நாளில் இவ்வளவு இன்ப அதிர்ச்சி கொடுத்தால் எப்படிங்க தாங்குவது” என்று அமைச்சர் ஷாஜஹான் சட்டமன்றத்தில் பேசிய பேச்சு, சபாநாயகர் உட்பட அவையில் இருந்த அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வைத்துள்ளது. சட்டமன்றப் பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் விஜய் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து வந்தார். முதலமைச்சரின் இந்த தொடர் அறிவிப்புகளால் உற்சாகமடைந்த அமைச்சர் ஷாஜஹான், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இவ்வாறு நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
அமைச்சர் ஷாஜஹானின் இந்த எதார்த்தமான மற்றும் கலகலப்பான பேச்சைக் கேட்டதும், அவையை வழிநடத்திக் கொண்டிருந்த சபாநாயகர் தன் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டுச் சிரித்தார். காப்பீட்டுத் தொகை உயர்வு, கார் சலுகை மற்றும் படிகள் உயர்வு என ஒரே நாளில் அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சிகளை முதலமைச்சர் விஜய் வாரி வழங்கியதால், அவையே விழாக்கோலம் பூண்டது போலக் காணப்பட்டது. அமைச்சரின் இந்த சுவாரசியமான கருத்து தற்பொழுது அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
