LATEST NEWS
“உடனே இதை செயுங்கள்.. இல்லனா குதிச்சிருவேன்..” செல்போன் டவரில் ஏறிய வாலிபர் போலீசாருக்கு போட்ட கண்டிஷன்.. 3.5 மணி நேர மரண பயம்.. ஷாக்கிங் வீடியோ..!!
ராஜஸ்தானின் டீக் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர், தங்கள் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக நீடித்த இணையத் தொடர்புப் பிரச்சனை காரணமாக செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இணைய சேவை உடனடியாக வழங்கப்படாவிட்டால் கீழே குதித்துவிடுவேன் என்று அவர் மிரட்டியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவரை கீழே இறங்குமாறு தொடர்ந்து சமாதானப்படுத்தினர்.
காவல்துறையினர் சுமார் மூன்றரை மணி நேரம் அந்த இளைஞருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரைப் பாதுகாப்பாக மீட்டனர். தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கு வந்து இணையப் பிரச்சனையை ஆய்வு செய்யத் தொடங்கும் வரை இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. இறுதியாக, இணையத் தொடர்புப் பிரச்சனை விரைவில் முழுமையாகச் சரிசெய்யப்படும் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று, அந்த இளைஞர் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாகக் கீழே இறங்கி வந்தார்.
