LATEST NEWS
“பாரதிதாசன் என்னோட தம்பி” அவர் படிக்கத்தான் நான் அமைச்சர் ஆனேன்… வன்னி அரசு உருக்கம்…!!
அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தனக்குரிய நிதி கிடைக்கவில்லை என மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு பயின்று வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன் கண்ணீர் மல்கக் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு இதுகுறித்துத் தனது விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
மாணவரின் குற்றச்சாட்டுக்குத் நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ள அமைச்சர் வன்னி அரசு, “பாரதிதாசன் படிக்கத்தான் நான் அமைச்சர் ஆனேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “பாரதிதாசன் என்னோட தம்பி, அவருக்காகத்தான் நாங்க இருக்கோம்; அவரின் கல்விக்குத் தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் முழுமையாக உதவும்” என்று கூறி, மாணவரின் படிப்பு எவ்வித தடங்கலும் இன்றித் தொடர்வதை அரசு உறுதி செய்யும் என உறுதியளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பாரதிதாசன் மட்டுமன்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் இந்த அரசு என்றும் துணையாக நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய, வசதியில்லாத ஏழை எளிய மாணவர்களை உயர்கல்வி பயில வைக்கத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தனது விளக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
