LATEST NEWS
“கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா,,?” ஒரே ஒரு எம்.எல்.ஏ-வை வச்சுக்கிட்டு கவர்னர் மாளிகை போறீங்க… டி.டி.வி. தினகரனை வெளுத்து வாங்கிய அமைச்சர் நிர்மல்குமார்..!
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் அரசியல் முரண்பாடுகளைத் தமிழக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதே நோக்கம் என்று முன்பு கூறிவிட்டு, தற்போது அவரை முதலமைச்சராக்க முயல்வது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சித் தாவல் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் குறித்துப் பேசிய அமைச்சர், தனது கட்சியின் ஒரேயொரு எம்.எல்.ஏ-வுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற டி.டி.வி.தினகரனின் செயலினைச் சாடியுள்ளார். முற்காலத்தில் இ.பி.எஸ்-ஐ கடுமையாக விமர்சித்துவிட்டு, இப்போது அவரை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கக் கோருவது சுயநல அரசியல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அரசியலைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர் தினகரன் என்பதை அமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார். தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே அவர் நாளுக்கு நாள் நிலைப்பாடுகளை மாற்றிப் பேசி வருகிறார் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
