‘ஹாஸ்டல் பாத் ரூமில் குழந்தை பெற்ற 18 வயது மாணவி’..! “அங்கிருந்து தப்பித்து ஓட்டம்”… ‘விசாரணையில் தெரியவந்த உண்மை’..? - cinefeeds
Connect with us

TRENDING

‘ஹாஸ்டல் பாத் ரூமில் குழந்தை பெற்ற 18 வயது மாணவி’..! “அங்கிருந்து தப்பித்து ஓட்டம்”… ‘விசாரணையில் தெரியவந்த உண்மை’..?

Published

on

ஹாஸ்டலில் உள்ள பாத்ரூமில் திடீரென குழந்தை அழும் சத்தம் கேட்ட நிலையில் அங்கு சென்று பார்த்த போது பிறந்து ஒருசில மணி நேரமே ஆன பச்சை இளம் குழந்தை ஒன்று அழுதுகொண்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநில துலே மாவட்டத்தில் இருக்கும் கல்லூரி மாணவிகள் வேலைக்கு செல்லும் பெண்கள் ஹாஸ்டல் ஒன்று உள்ளது அதில் உள்ள பாத்ரூமில் திடீரென குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

Advertisement

குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டு அங்கு சென்ற ஹாஸ்டல் காப்பாளர், அங்கிருந்த வாளியில் பிறந்த குழந்தை ஒன்று அழுதுகொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து பின்னர் அது குறித்து ஹாஸ்டல் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனால் குழந்தை யாருடையது என எந்த மாணவியும் தெரிவிக்கவில்லை. இதனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

ஹாஸ்டலுக்கு வந்த போலீசார் அங்கிருந்த மாணவிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொணத்தில் ஒரு மாணவியின் மீது சந்தேகம் ஏற்பட அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது பிறந்த குழந்தை இந்த 18 வயது மாணவியின் குழந்தை தான் என்பது தெரியவந்துள்ளது.

கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த அந்த மாணவி, அந்த குழந்தையை வாளியில் போட்டு விட்டு அங்கிருந்து ஒன்றும் தெரியாததை போல வந்து விட்டார். பின் அந்த குழந்தையையும், மாணவியையும் தொடர் சிகிசைக்காக போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Advertisement

மேலும் கல்லூரி மாணவிக்கு குழந்தை பிறந்தது பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in