Uncategorized
புதுடெல்லியில் பிரம்மாண்டமாக வளம் வரும் அய்யனார் சிலை …?? தமிழகத்திற்கு பெருமை… பூணூல் போட்ட அய்யனார்…
நாளை 71 ஆவது குடியரசு தினத்தை ஒட்டி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் மற்றும் அரசு அலுவலங்களில் கொடி ஏற்றும் விழா நடைபெறும் .அதனை ஒட்டி இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கோலாகலமாக ஏற்பாடுகள் நடைபெறவுள்ளது. அதனால் 16 மாநிலங்களிலிருந்து அலங்கார ஊர்திகளும் சென்றுவுள்ளன.
மேலும் 22 அணிவகுப்பு ஊர்த்தீகள் நடைபெறவுள்ளன. மேலும் தமிழ்நாடு சார்பில் தமிழ் கடவுளின் காவல் தெய்வமான அய்யனார் சிலை மிக பிரம்மாண்டமாக செய்து வளம் வரவுள்ளது . அந்த அய்யனார் வாகனத்திற்கு முன் ஒயிலாட்டம் ஆடும் கலைஞர்கள் தங்கள் திறமையைக் காட்டவுள்ளனர். இதற்காக 30க்கும் மேற்பட்ட கலைஞர்கள் டெல்லி சென்றுள்ளனர்.
மேலும் நீர் சேமிக்கும் வகையான விளக்கவுரைக்காக செய்யப்பட்ட பெரிய நீர்சேமிப்பு ஊர்திகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும் நேற்று நடந்த ஒத்திகையில் அய்யனாரின் சிலையை பார்த்து பலரும் வியந்தனர். மேலும் அந்த சிலைக்கு லைக்குகளும் அள்ளுகிறது.மேலும் அதனை பார்த்த நெட்டிசன்கள் அய்யனார் சிலைக்கு யார் பூணூல் போட்டு அழகு பார்த்தது என்று கேள்வியும் எழுப்பினர்.
