Uncategorized
திருநம்பியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அழகிய இளம் பெண் …?? இரவில் போலீசில் தஞ்சம்…!!!
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ராம் . இவருக்கு வயது 26 . இவர் பிறப்பில் பெண்ணாக பிறந்தாலும் சில ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியவர். மேலும் இவரது வீட்டு அருகில் வசித்து வரும் சரஸ்வதிக்கும் கடந்த 2 வருடங்களாக தொடர்பு இருந்தது . இவர்கள் தீவிரமாக காதலித்தனர்.
இவர்களது காதலுக்கு சரவாதியின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தது .அதனால் சரவாதியும் ராமும் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு இருவரும் கோவையை அடுத்த சூலூர் வந்தனர். அங்கு பல திருநம்பிகளின் உதவியுடன் கோவிலில் திருமணம் நடத்தினர்.
பிறகு சூலூர் காவல்நிலையத்தில் தங்களுக்கு அடைக்கலம் தரக்கூறி தஞ்சம் அடைந்தனர், இதனிடையில் சரஸ்வதி காணவில்லை என்று அவளின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்ததால் சூலூர் போலீசார்கள் அவர்களை சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
