LATEST NEWS
“ஐயோ என்ன கொடுமை இது…” பெற்றோர் கொடுத்த திருமண அழுத்தம்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ..!!
சொந்த வீட்டிலேயே ஒருவரின் கனவுகளை விடத் திருமணத்தைப் பற்றிய பேச்சுகளே அதிகமாகும்போது, பல நேரங்களில் மனிதர்கள் மனதளவில் கடுமையாக உடைந்து போகிறார்கள். அந்த வகையில், குடும்பத்தினரின் தொடர்ச்சியான திருமண அழுத்தத்தைத் தாங்க முடியாமல், தன் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக இளம் பெண் ஒருவர் தனது தலையை மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது.
தனக்குத் தன் நீளமான கூந்தல் மிகவும் பிடிக்கும் என்றும், ஆனால் திரும்பத் திரும்பத் திருமணத்திற்கு வற்புறுத்தப்பட்டதால் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். “என் கூந்தலை விட எனக்கு என் சுதந்திரமே மிகவும் முக்கியம்” என்ற உறுதியான வார்த்தைகளுடன் அவர் எடுத்த இந்த அதிரடி முடிவு, பெண்களின் சுயவிருப்பம் மற்றும் சுதந்திரம் குறித்த பெரிய விவாதத்தை இணையத்தில் ஏற்படுத்தியுள்ளது.
