LATEST NEWS
திருச்செந்தூரில் பகீர்…! விஐபி தரிசனத்திற்கு அமைச்சரிடமே ரூ.4,000 கேட்ட அர்ச்சர்கள்… வசமாக சிக்கியது எப்படி…? பரபரப்பு சம்பவம்…!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்புப் பாதையில் சென்று இறைவனை வழிபடுவதற்கு, அங்கிருந்த அர்ச்சகர்கள் சிலர் பக்தர்களிடம் முறைகேடாகப் பணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனை நேரில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், சாதாரண பக்தர் போல அங்கு சென்றார். அப்போது அவரிடம் விரைவாக சுவாமி தரிசனம் செய்து வைப்பதாகக் கூறி, அங்கிருந்த சில அர்ச்சகர்கள் நான்காயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர்.
அவர்கள் கேட்ட தொகையை அமைச்சர் தனது அலைபேசி செயலியான ‘ஜிபே’ (GPay) மூலம் டிஜிட்டல் முறையில் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். பணம் கைமாறியதை ஆதாரமாக வைத்து, முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களை அவர் உடனடியாக கைகாட்டி அதிகாரிகளிடம் சிக்க வைத்தார். சட்டவிரோதமாகப் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த அர்ச்சகர்கள் மீது இந்த அதிரடி சோதனையின் மூலம் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
