LATEST NEWS
விஜய் செத்துப் போயிட்டார்ன்னு கதறி அழுதாங்களா? மொத்தமா ஊத்திக்கிச்சு… தவெக அமைச்சர்களை கிழித்துத் தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்..!!
தமிழகத்தில் தவெக தலைவரின் பேச்சையும் நடவடிக்கைகளையும் மிகக் கடுமையானதாகவும், அதேசமயம் நகைச்சுவையாகவும் கலாய்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அளித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி. உதயகுமார், தற்போதைய சூழலில் தமிழகத்தில் ஜனநாயகம் என்பது முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார்.
மேலும், ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், அவர்களின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் கேள்விகளையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருவதாக மிகக் காரசாரமாகச் சாடினார்.
தொடர்ந்து தவெக அமைச்சர்களைக் கடுமையாக விமர்சித்த அவர், “இன்னைக்கு இந்த ஆட்சியில் ஜனநாயகம் ஒட்டுமொத்தமாக ஊத்திக்கிச்சு. இவங்களோட அமைச்சர்கள் எல்லாம் போய் கதறி அழுதுட்டு வர்றாங்களே… விஜய் செத்துப் போயிட்டாரான்னு அழுதாங்களா, இல்லை தமிழ்நாட்டுல ஜனநாயகம் செத்துப் போச்சுன்னு அழுதாங்களான்னே தெரியல!” என்று சிரித்தபடியே கலாய்த்துக் தள்ளினார்.
