LATEST NEWS
“ஊர் ஊராகச் சென்று விசில் ஊதிய முதல்வர் விஜய்.. இன்று தட்டிக்கழிக்கிறார்..!” தவெக அரசை அட்டாக் செய்த ஆர்.பி.உதயகுமார்.. கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு…!!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தற்போதைய முதலமைச்சர் விஜய் அரசின் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாக மிகக் காரசாரமாகக் குற்றஞ்சாட்டிப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாதப் புயலை வெடிக்கச் செய்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழ்நாட்டில் நடந்த அனைத்து குற்றச் சம்பவங்களுக்கும் அரசுதான் முழு பொறுப்பு என ஊருக்கு, ஊர் சென்று விசில் ஊதிய விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு நடக்கின்ற குற்றச் சம்பவங்களுக்கு அரசு பொறுப்பு அல்ல மக்கள் தான் பொறுப்பு என அரசின் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார் என்று சட்டமன்றக் கூட்டத்தொடரை ஒட்டி அவர் மிக அனல் பறக்கக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அதிமுக சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அதிரடியான அரசியல் விமர்சனம், தமிழக கோட்டை வட்டாரத்தையே தற்பொழுது உலுக்கிப் போட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சும், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மற்றொரு பேச்சும் பேசுவதாக முதலமைச்சரை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்துள்ள ஆர்.பி.உதயகுமாரின் இந்தத் தாக்குதல் அரசியலில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
