LATEST NEWS
BREAKING: செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் 2 பேர் கைது… காவல்துறை அதிரடி ஆக்ஷன்…!!
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிட்டு, முறையற்ற வகையில் பண வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் ஏற்கனவே தமிழக வெற்றிக் கழக ஆட்சி கவிழ்ப்பு பேர வழக்கில் கைதாகி, கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் ஜாமினில் வெளியே வந்திருந்தனர். இந்நிலையில், ஜாமினில் வெளிவந்த குறுகிய காலத்திலேயே டாஸ்மாக் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
