தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர்தான் நடிகை ஷாலினி.என் அம்மு குட்டி அம்மாவின் க்யூட் குழந்தையாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முதல் முதலாக ஹீரோயினியாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பிரியாத வரம் வேண்டும்.
பின்னர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஷாலினி சினிமாவை ஓரம் கட்டினார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஷாலினி அஜித்திடம்,திருமணத்திற்கு பிறகு ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது.
ஒரு மாதத்தில் 15 நாட்களில் படத்திற்கும் மீதி நேரத்தை குடும்பத்திற்காகவும் செலவிட வேண்டும் என்று சத்தியம் வாங்கியுள்ளார். இந்த சத்தியத்தை அன்று முதல் இன்று வரை அஜித் காப்பாற்றி வருகிறார். சமீபத்தில் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தனது குடும்பத்துடன் போர்சுக்களில் அஜித் கொண்டாடிய நிலையில் அங்கு எடுத்த புகைப்படத்தை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க