LATEST NEWS
BREAKING: செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து… TR பாலுவின் மதுபான ஆலையில் ரெய்டு..!!
செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து, தற்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் T.R. பாலுவுக்குச் சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அவருக்குச் சொந்தமாகச் செயல்பட்டு வரும் மதுபான ஆலை மற்றும் அவருடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இந்த அதிரடி ரெய்டு நடைபெற்று வருகிறது.
இச்சோதனையானது T.R. பாலுவுக்குச் சொந்தமான இடங்களில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் சுமார் 41 வெவ்வேறான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் ஒரே நேரத்தில் தீவிரமாக நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
