LATEST NEWS
“அடக்கடவுளே..! திருடன் யோசித்த ஐடியா இருக்கே…!” போலீஸிடம் தப்பிக்கத் திருடன் செய்த அசிங்கமான காரியம்…. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. சிரிப்பை அடக்க முடியாத வைரல் சம்பவம்..!!
டெல்லியில் சாக்கடைத் திருடன் மற்றும் பார்ட்டி பத்மாஷ் என்றழைக்கப்படும் தீபக் என்பவரை சதர் பஜார் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர் நீண்டகாலமாக மொபைல் போன் திருட்டு, பாக்கெட் அடிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். போலீஸாரிடம் சிக்கும்போதெல்லாம் ஒரு விசித்திரமான உத்தியைக் கையாளுவார், பிடிபட்ட உடனே தனது பேன்ட்டிலேயே மலம் கழித்து விடுவார். இதனால் ஏற்படும் கடுமையான துர்நாற்றம் தாங்க முடியாமல், போலீசார் மூக்கைப் பிடித்துக்கொண்டு தூர விலகிச் செல்ல, இவர் தப்பித்து ஓடிவிடுவது வழக்கமாக இருந்துள்ளது.
दिल्ली का सबसे गंदा चोर पकड़े जाने पर पेंट में पॉटी ( शौच ) करके भाग जाता 😱😱
इस चोर का नाम दीपक है जिसे पुलिस ने दिल्ली के सदर बाजार से गिरफ्तार कर लिया
यह मोबाइल चोरी, जेबकतरे , जैसा काम करता था ।
जब भी पुलिस इसे पकड़ने की कोशिश करता तुरंत पैंट मे पोटी कर देता , इससे तेज… pic.twitter.com/PJ6tHfX0zI— Sumit yadav (@Yummy9534) July 28, 2026
ஆனால் இந்த முறை டெல்லி போலீசார் சாதுரியமாகச் செயல்பட்டனர். இம்முறை அவரைக் பிடிக்க வந்த சிறப்புப் படை போலீசார் கையுறைகள் மற்றும் முகக்கவசங்களுடன் தயார் நிலையில் வந்தனர். வழக்கம் போல தீபக் தனது பழைய உத்தியைப் பயன்படுத்தி துர்நாற்றத்தை ஏற்படுத்தியபோதிலும், முகக்கவசம் அணிந்திருந்த போலீசாருக்கு அது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இறுதியில் அவரது தந்திரம் பலிக்காமல், சாக்கடைத் திருடன் தீபக்கை போலீசார் காய் நகர்த்தி எளிதாகக் கைது செய்தனர்.
