LATEST NEWS
திமுக-வில் OPS-க்கு மெகா பதவி..! அறிவாலயத்தில் ஸ்டாலின் அடிக்கப்போகும் முத்திரை… தமிழக அரசியலில் பரபரப்பு தகவல்.!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டத்தில், பல முக்கிய அதிரடி முடிவுகளும் கட்சி ரீதியான முக்கிய அறிவிப்புகளும் வெளியாகவுள்ளன. குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக மற்றும் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய மூத்த தலைவர்களுக்கு, கட்சியில் வழங்கப்படவுள்ள புதிய மற்றும் பெரிய பொறுப்புகள் குறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் தேர்தல் நேரத்தில் திமுகவிற்கு ஆதரவாகச் செயலாற்றிய முக்கியத் தலைவர்களை முறைப்படி கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் அமரவைத்து கௌரவிக்கத் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், திமுகவின் உட்கட்சி அமைப்பை அடிமட்டம் வரை வலுப்படுத்தும் நோக்கில், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்துவது உள்ளிட்ட கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள் தொடர்பாக 9 முக்கியத் தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ளன. தற்போதுள்ள 78 மாவட்டப் பிரிவுகளை 100-க்கும் மேலாக விரிவுபடுத்தி, அதன் மூலம் நிர்வாக ரீதியாகத் தொய்வடைந்துள்ள பகுதிகளைச் சீரமைக்கவும், அதே வேளையில் கட்சியில் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகளவில் புதிய முக்கியப் பொறுப்புகளை வழங்கி முன்னிலைப்படுத்தவும் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தின் வாயிலாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.
