LATEST NEWS
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..! நொடிப் பொழுதில் மாறும் ரிங்.. அதிவேக ரயிலில் ஓட்டுநர்கள் செய்யும் ‘அந்த’ மாயாஜாலம்… வைரலாகும் ரயில்வேயின் ரகசியவீடியோ..!”
ரயிலில் பயணிக்கும்போது 99% பேர் கவனித்திருக்கும் ஒரு சுவாரசியமான விஷயம் தான், ரயில் எந்தவொரு நிலையத்திலும் நிற்காமல் அதிவேகமாகச் செல்லும்போது, லோகோ பைலட்டுக்கும் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் இடையே மின்னல் வேகத்தில் மாற்றிக்கொள்ளப்படும் அந்தச் சிறிய வட்ட வடிவ வளையம். இது சாதாரணமாகத் தெரிந்தாலும், ரயிலின் பாதுகாப்பான பயணத்திற்கு மிக முக்கியமான ஒரு கருவியாகும். இதன் பெயர் ‘நீல்ஸ் பால் டோக்கன்’ அல்லது ‘டோக்கன் ரிங்’ என்பதாகும். சிங்கிள் டிராக் வழிகளில், ஒரே பாதையில் எதிர் எதிரே இரண்டு ரயில்கள் வந்து மோதிக்கொள்வதைத் தடுக்கவே இந்தத் தொழில்நுட்பம் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு லோகோ பைலட்டிடம் இந்தத் உலோகப் பந்து இருந்தால் மட்டுமே, அவருக்கு அந்தப் குறிப்பிட்ட பாதையில் ரயிலை இயக்க அனுமதி இருக்கிறது என்று அர்த்தம். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
99% लोगों ने ट्रेन में ये देखा होगा लेकिन इसका असली राज़ नहीं जानते!
ट्रेन जब फुल स्पीड में किसी स्टेशन से बिना रुके गुजरती है तो उस वक्त लोको पायलट और स्टेशन मास्टर के बीच एक छोटी-सी गोल चीज़ बिजली जैसी रफ्तार में एक्सचेंज होती है!
सवाल ये है आखिर ये होती क्या है? इसे… pic.twitter.com/yLXx3BsccR— Jamal | Viral desk (@jamalk38) July 27, 2026
ஒருவேளை லோகோ பைலட் அதிவேகத்தில் செல்லும் போது அந்த வளையத்தைப் பிடிக்கத் தவறினாலோ அல்லது அது கைநழுவி கீழே விழுந்துவிட்டாலோ, உடனடியாக ரயிலை நிறுத்த வேண்டும் என்பதே இந்திய ரயில்வேயின் கண்டிப்பான விதியாகும். டோக்கன் கையில் இல்லையெனில், அடுத்த ரயில் நிலையப் பகுதிக்குள் நுழைவதற்கு லோகோ பைலட்டுக்கு சட்டப்பூர்வ அனுமதி கிடையாது. இதனால் லோகோ பைலட் உடனடியாகப் பிரேக் போட்டு ரயிலை நிறுத்துவார். அதன்பின், ஸ்டேஷன் மாஸ்டர் அல்லது ரயில்வே ஊழியர்கள் கீழே விழுந்த அந்தத் டோக்கனைக் தேடிக் கண்டுபிடித்து லோகோ பைலட்டிடம் ஒப்படைத்த பிறகே, அல்லது அவசர கால விதிமுறைகளின்படி மாற்று அனுமதிச்சீட்டு வழங்கப்பட்ட பிறகே ரயில் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல முடியும்.
