CINEMA
“கேட்கவே செம த்ரில்லா இருக்கே” தங்கலான் படத்தின் கதை இதுதானா…? லீக்கான தகவல்…!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மேனன் உட்பட பலர் நடித்த திரைப்படம் தங்கலான். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் கதை இதுதான் என்று கூறி தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது .அதாவது கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கச் சுரங்கம் கேஜிஎப்பில் வெள்ளைக்காரர் ஒருவர் வந்து தங்கத்தை தேடும் பணியில் ஈடுபடும்படி கோரிக்கை வைக்க, விக்ரம் தன்னுடைய ஆட்களோடு தங்கம் தேடும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அமானுஷ்யமான விஷயங்கள் மூலமாக இவர் தாக்கப்படுகிறார்.
அவர்தான் மாளவிகா மோகனன் . இந்த படத்தில் அவர் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதே கதை என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலரில் கூட அவரை ஒரு அமானுஷ்யம் போல தான் விக்ரமை கட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.