LATEST NEWS
“காமெடியா இருக்கு சார்”– போலீஸ் வாகனத்தில் ஏறியதும் சிரித்துக்கொண்டே உதயநிதி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை… விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு..!!
நடிகை த்ரிஷா குறித்துப் பொதுக்கூட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் பேசிய விவகாரத்தில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக நிர்வாகியுமான உதயநிதி ஸ்டாலின் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். காவிரி விவகாரப் போராட்டத்தின் போது முதல்வர் சி. ஜோசப் விஜய் குறித்து அவர் பேசுகையில், கூட்டத்தில் எழுந்த “த்ரிஷா” என்ற கோஷத்திற்கு உதயநிதி அளித்த ஆபாசமான பதில் தவெக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தன் மீதான இந்த கைது நடவடிக்கையை ஒரு “காமெடியாகப் பார்க்கிறேன்” என செய்தியாளர்களிடம் சிரித்தபடியே உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தவெக தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சூழலில், இக்கைது நடவடிக்கைக்கு எதிராக திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.
