LATEST NEWS
ஐயோ பாவமே… மது போதையில் பெத்த தாயே செய்த வெறி செயல்.. 9 மாதப் பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. இணையத்தில் வலுக்கும் #JusticeForBabyAnuradha..!!
பாதுகாக்க வேண்டிய தாயின் கரங்களாலேயே 9 மாதப் பெண் குழந்தை கொடூரமாகக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் போது தாய் கடுமையான மது போதையில் இருந்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மது அருந்தியிருப்பது போதையை விளக்குமே தவிர, இந்த இரக்கமற்ற கொடூரத்திற்கு எந்த வகையிலும் சாேக்காகவோ அல்லது மன்னிப்பாகவோ அமைய முடியாது. குரலற்ற, தப்பியோட வழியற்ற, தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியாத ஒரு பிஞ்சு உயிரின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது.
DRUNK MOTHER, DE@D BABY: WHEN ADDICTION DESTROYS EVEN A MOTHER’S BASIC DUTY
A nine-month-old baby allegedly lost her life at the hands of the very woman who was supposed to protect her.
Police say the mother was under the influence of alcohol when the child was k!lled. Alcohol… pic.twitter.com/MgsKEFmAEK— ShoneeKapoor (@ShoneeKapoor) August 3, 2026
இதை வெறும் “குடும்பச் சோகம்” என்று எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இது தாய்மைக்கே இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் மற்றும் ஓர் அப்பாவிப் பிஞ்சுக்கு எதிராகச் செய்யப்பட்ட மன்னிக்க முடியாத குற்றமாகும். “பாப்பா அனுராதாவுக்கு நீதி வேண்டும்” என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்து வரும் நிலையில், தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
