LATEST NEWS
உச்சகட்ட பரபரப்பு..! உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது… கொந்தளிக்கும் திமுகவினர்…!!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக அறிவுறுத்தலையும் மீறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழகக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்வதற்கு எதிரான திமுகவின் அவசர வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வரை எவ்வித கைது நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என மாண்புமிகு நீதிபதி வாய்மொழியாக அறிவுறுத்தியிருந்த நிலையில், அதனைப் பொருட்படுத்தாமல் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவு வெளியாவதற்கு முன்பே கைது நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாகக் கூறி, நீலாங்கரை இல்லத்தில் வைத்து இந்த கைதை போலீசார் அரங்கேற்றியுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறி இந்த நள்ளிரவு மற்றும் அதிகாலைக் கைதுப் படலம் நடத்தப்பட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்புச் செயல் என திமுக வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கடுமையாகக் சாடியுள்ளனர். சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி அவசர அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் இன்று பிற்பகலில் நீதிமன்ற விசாரணையின் போது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவல் துறையின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையால் தமிழக அரசியல் களம் தற்போது உச்சகட்டப் பரபரப்பில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
