LATEST NEWS
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி.. “இவர்களுக்கு கிடையாது” காலையிலேயே வெளியான ஷாக் நியூஸ்…!!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் மற்றும் அதற்கு கீழ் நகைக்கடன் பெற்ற ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையான பயனாளிகளை கண்டறியும் பொருட்டு, கடன் பெற்றவர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் கூட்டுறவுத் துறையினரால் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
தற்போதைய தகவல்களின்படி, இந்த தள்ளுபடி சலுகையானது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், சர்க்கரை மட்டுமே வாங்கும் வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் தவறான தகவல்களை வழங்கி கடன் பெற்றவர்கள் ஆகியோர் இந்த சலுகையைப் பெற தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
ஒரே குடும்பத்தில் பல கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றவர்கள் மற்றும் விதிமுறைகளை மீறியவர்கள் முழுமையாக நீக்கப்பட்டு, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்த முறையான புதிய தகுதி விதிமுறைகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு அரசாணையாக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
