LATEST NEWS
CM சீட் ஓவர்… அடுத்து PM சீட்.. டெல்லிக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.. அலறும் காங்கிரஸ் மேலிடம்… அரசியலில் அடுத்த அதிரடி திருப்பம்…!!
தமிழக அரசியல் வரலாற்றில் மட்டுமின்றி உலக அரசியல் வரலாற்றிலும் அரிதான திருப்பமாக, கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தவெக தலைவர் விஜய் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வந்த திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி மக்கள் மத்தியில் அமோக ஆதரவைப் பெற்றுள்ள விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்றதுமே தனது தேர்தல் வாக்குறுதிகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறார். சிங்கப்பெண் சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் இலவச மின்சாரம் போன்ற மக்கள் நலத் திட்டங்களுடன், வரவிருக்கும் ஆகஸ்ட் 5 பட்ஜெட்டை நோக்கி அவரது ஆட்சி நகர்ந்து வருகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் முதல்வராகப் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் விஜய் நிகழ்த்தியதாகக் கூறப்படும் சாதனைகள் குறித்தான இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மற்றும் தகவல்கள் வட மாநிலங்களிலும் மிக வேகமாகப் பரவி வருகின்றன. குறிப்பாக, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது, தனியார் மருத்துவமனை சிகிச்சைக் கட்டண ரத்து, பாலியல் குற்றவாளிகளுக்குத் தீவிர தண்டனை மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கான தானியங்கி இயந்திரங்கள் மூலம் பணம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு செய்திகள் வட மாநில மக்களிடையே விஜய் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தி உள்ளன.
இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த அசுர வளர்ச்சி மாநில எல்லையைக் கடந்து தேசிய அரசியலிலும் தீவிர விவாதப் பொருளாகியுள்ளது. அடுத்ததாக 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளையும் கைப்பற்றி, தமிழர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த தவெக தரப்பு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், பிரதமர் பதவியை இலக்காகக் கொண்டுள்ள ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் திட்டங்களுக்கு தவெக தரப்பு புதிய அரசியல் சவாலை அளித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
