பாலியல் புகார் குறித்து விசாரிக்க தமிழ்நாட்டிலும் குழு…. நடிகர் விஷால் பேட்டி…!! - cinefeeds
Connect with us

CINEMA

பாலியல் புகார் குறித்து விசாரிக்க தமிழ்நாட்டிலும் குழு…. நடிகர் விஷால் பேட்டி…!!

Published

on

தமிழ் நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 3 நாளில் குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடிகைகள் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து ஹேமா கமிட்டி அறிக்கை அளித்தது. இதனால் மலையாள திரையுலகில் பரபரப்பு நிலவுகிறது என்று கூறப்பட்டது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த விஷால், தமிழ்நாட்டிலும் 10 பேர் குழு அமைக்கப்படும், அதில் புகார் அளிக்கலாம்.

நடிகைகளிடம் தவறாக நடந்துகொண்ட அனைவருக்கும் உரிய தண்டனை கொடுக்க வேண்டும். மேலும், பாலியல் தொல்லைகளில் இருந்து விடுபடுவதற்கு பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்  என்றார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in