Uncategorized
இந்தியாவில் எடுத்த முடிவு தோல்வி அடைந்தது ஏன்… மரணம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது….அரசுகள் எடுத்த முடிவு என்ன…?
சீனா ஹாங்காங் நகரில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவி வந்த கொரோனா வைரஸ் . இப்பொழுது இந்தியாவில் தாக்கமானது அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த 63 வயது உள்ள ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் ஏற்கனவே நான்கு பேர் கொரோனா தொற்று மூலம் உயிரிழந்திருந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 63 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. இவருக்கு சர்க்கரை மற்றும் இருதய நோய் ஏற்கனவே இருந்ததாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் கொரோன வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தியா முழுவதும் இன்று வீட்டிலேயே முடங்கி வருகின்றன ..நிலையில், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் மார்ச் 31 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
