Uncategorized
உ யி ரிழந்த வசந்தகுமாரின் மொத்த சொ த்து ம திப்பு எவ்வளவு தெரியுமா ?? தெரிஞ்சா கண்டிப்பா அ தி ர்ச்சியாகிடுவீங்க !!
தமிழகத்தில் உ யி ரி ழந்த வசந்தகுமாரின் சொத்து மதிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது 412 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்த்தீஸ்வரம் கிராமத்தில், 1950-ஆம் ஆண்டு ஹரிகிருஷ்ண பெருமாள்-தங்கம்மை என்ற தம்பதிக்கு H.வசந்தகுமார் மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 5 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர்.
அந்த ஐந்து சகோதரர்களில் குமரி ஆனந்தும் ஒருவர், இவர் வேறு யாருமில்லை, தற்போது தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தர்ராஜனின் தந்தை ஆவார்.
இதனால் வசந்தகுமார் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு சித்தப்பா முறை ஆகும். வசந்தகுமார் பொறுத்தவரை அவருடைய உழைப்பு தான் இந்தளவிற்கு மிகப் பெரிய தொழிலதிபரானார் என்றே கூறலாம்.
தொழிலதிபர் மட்டுமின்றி, நல்ல மனிதர். காங்கிரஸ் கட்சியில் தனக்கென்று தனி செ ல் வாக்கு கொண்டவர். கட்சியில் இருந்தால் தான் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றில்லாமல், தன்னால் இயன்ற உதவியை அவ்வப்போது செய்து வந்தார்.
இதுவே அவரை கடந்த மக்களவை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தற்கு காரணம், கன்னியாகுமரி மக்கள் வசந்தகுமார் மீது அந்தளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தனர்.
அதன் படி கடந்த 2019-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வசந்தகுமார் நின்றார்.
அப்போது, இவர் வேட்பு மனு தாக்கலின் போது, இவரது மொத்த சொத்து 412 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 302 ரூபாய் ஆக தெரிவித்துள்ளார்.
கடந்த 5 வருடத்தில் மட்டும் வசந்தகுமாரின் சொத்து மதிப்பு 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இவரின் அசையும் சொத்து 230 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 302 ரூபாய் என்றும், அசையா சொத்து 182 கோடியே 25 லட்சம் ரூபாய் ஆக மொத்தம் 412 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 302 ரூபாய் ஆகும் என தெரிவித்துள்ளார்.