LATEST NEWS
3 தலைமுறை நட்பு உடைந்தது… உதயநிதியுடன் சண்டை…? உண்மையை உடைத்தார் அன்பில் மகேஷ்… அதிர்ச்சியில் அரசியல் களம்..!!!
உதயநிதி ஸ்டாலினுடனான நட்பில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவல்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யப்பொழி விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உதயநிதிக்கும் தனக்கும் இடையிலான 3 தலைமுறை நட்பு உடைந்துவிட்டது, பிரிந்துவிட்டது எனத் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
மேலும், அந்த செய்தியை இணையத்தில் சுமார் 1.5 லட்சம் பேர் பார்த்து வருகிறார்கள் என்றும், அந்த 1.5 லட்சம் பேரில் தானும் உதயநிதியும் கூட அடங்குவோம் என்றும் அவர் நகைச்சுவையுடன் கூறினார். இதுபோன்ற செய்திகள் அனைத்தும் உண்மையை மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் ‘டேக் டைவர்சன்’ வேலை மட்டுமே என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
