தூங்க சென்ற 8 பேர் ” காலையில் பிணமாக உள்ளனர் “..??? 4 பேர் குழந்தைகள் ..!!!! ஜன்னல்கள் , கதவுகள் உள்பக்கம் மூடியநிலை … – cinefeeds
Connect with us

TRENDING

தூங்க சென்ற 8 பேர் ” காலையில் பிணமாக உள்ளனர் “..??? 4 பேர் குழந்தைகள் ..!!!! ஜன்னல்கள் , கதவுகள் உள்பக்கம் மூடியநிலை …

Published

on

நேபாள நாட்டில் உள்ள பிரபல சுற்றுலாத்தளமான போகாராவிற்கு கேரளாவை சேர்ந்த 15 பேர் சுற்றுலாப் பயணிகளாக சென்றனர். அவர்கள் அனைவரும் நேற்றிரவு மகவான்பூர் மாவட்டத்தின் டமான் பகுதியில் உள்ள எவரெஸ்ட் பனொரமா ரிசார்ட்டில் தங்கினர். அந்த நேபாளம் ஒரு குளிர் பிரதேசம் என்பதால் அங்கு உள்ள குடி இருப்புகள் அனைத்திலும் இதமான சூட்டை தரும் ஹீட்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கும். அப்படி தான் இந்த சுற்றுலா பயணிகள் தங்கி இருந்த ரெசார்ட்டிலும் ஹீட்டர்கள் பொருத்தப்பட்டு இருந்தது.

இதில் ஒரு அறையில் 8 பேரும், மற்றொரு அறையில் 7 பேரும் தங்கியுள்ளனர். இரவு நேரம் என்பதால் ரிசார்ட் அறையின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உள்பக்கம் தாழிட்டு சுற்றுப்பயணிகள் தூங்கும் நேரத்தில் அந்த ஹீட்டர்களை உபயோகிக்க தொடங்கி வுள்ளனர். ஹீட்டர் ஆன் செய்த சிறிது நேரத்தில் அங்கு இருந்தவர்கள் அனைவரும் மயங்கி விழுந்து உள்ளனர். அதனால் ரெசார்ட்டின் உரிமையையாளர்கள் கதவை உடைத்து அவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Advertisement

அதில் 4 குழந்தைகள் உட்பட 15 நபர்கள் இறந்து இருப்பது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மேலும் இந்த சம்பவத்தால் ரிசார்ட் உரிமையாளர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் காவல் துறையினர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in