CRIME
“காரை பூட்டியும் விடாத காதலன்.. செங்கலால் கண்ணாடியை உடைத்து ஐஐடி பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்.. நடுரோட்டில் அலறிய காதலி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ”..!!
கான்பூரில் தனது காதலியான ஐஐடி-கான்பூர் ஊழியரை காரில் இருந்து வெளியே இழுத்து, செங்கலால் கொடூரமாகத் தாக்கிய தேவாஷிஷ் நிகம் (38) என்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளது. சனிக்கிழமை மாலை பித்தூரில் உள்ள பிரம்மாவர்த் காட் நோக்கி இருவரும் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியுள்ளது. மந்தனா அருகே காரை நிறுத்திய தேவாஷிஷ், சாலையோரம் கிடந்த செங்கலை எடுத்ததால், பயந்துபோன அப்பெண் காரைப் பூட்டியுள்ளார். இருப்பினும், காரின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கதவைத் திறந்த தேவாஷிஷ், அப்பெண்ணை வெளியே இழுத்துத் தலையிலும் உடலிலும் செங்கலால் பலமுறை தாக்கியுள்ளார். அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த வழிப்போக்கர்கள், தேவாஷிஷைப் பிடித்துத் தாக்கி காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததுடன், பலத்த காயமடைந்த அப்பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
There’s blood on the car seat, a brick, and a ladies’ bag – what do you think happened?…
A retired IAS officer’s son brutally beat his girlfriend for refusing to marry him.
📍#UttarPradesh–#Kanpur pic.twitter.com/2myjh4u61x— Siraj Noorani (@sirajnoorani) July 5, 2026
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்தபோது, தனது தாய் ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி தேவாஷிஷ் காவல்துறையினரை அச்சுறுத்தவும், தன் செல்வாக்கைப் பயன்படுத்தவும் முயன்றுள்ளார். ஆனால், அவரது மிரட்டலையும் மீறி காவல்துறை அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளது. காருக்குள் இருந்த இரத்தக் கறைகள், பயணிகள் இருக்கையில் கிடந்த செங்கல் மற்றும் பாதிக்கப்பட்டவரின் கைப்பை ஆகியவை அந்தத் தாக்குதலின் கொடூரத்தை உணர்த்தும் வகையில் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கான பின்னணி குறித்து அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் மேற்கு மண்டல காவல்துறை துணை ஆணையர் எஸ்.எம். காசிம் அபிடி தெரிவித்துள்ளார்.
