LATEST NEWS
“எங்க நேரத்தை வீணடிக்காதீங்க” போராட்ட வீடியோக்களை பார்க்க எங்களுக்கு நேரமில்லை.. தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிரடி..!!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது டெல்லி போலீஸார் கட்டவிழ்த்து விடும் அடக்குமுறைகள் மற்றும் தடியடி குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதுதொடர்பான ஆதாரங்களாகப் போராட்டக் களத்தின் வீடியோக்களை நீதிமன்றத்தில் காட்ட அவர்கள் முயன்றபோது, அதற்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடுமையான மறுப்புத் தெரிவித்துள்ளார். “எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்; போராட்ட வீடியோக்களைப் பார்ப்பதில் எங்களுக்கு விருப்பமும் இல்லை, அதைப் பார்க்க எங்களுக்கு நேரமும் இல்லை” என்று முறையிட்ட வழக்கறிஞர்களிடம் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தின் நேரத்தை இத்தகைய வீடியோ காட்சிகளைப் போட்டுக் காட்டுவதன் மூலம் வீணடிக்கக் கூடாது என்பதில் தலைமை நீதிபதி உறுதியாக இருந்தார். டெல்லி மாணவர் போராட்ட விவகாரம் மற்றும் போலீஸ் நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்கள் முறையிட்டபோது உச்சநீதிமன்றம் காட்டிய இந்தத் தீவிரமான அணுகுமுறை, தற்போது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
