LATEST NEWS
“அடப்பாவிங்களா… ரீல்ஸ்க்காக இப்படியா…! கொஞ்சம் தப்பியிருந்தாலும் சோலி முடிஞ்சிருக்கும்..!” கரடியை வம்புக்கு இழுத்த இளைஞர்… அப்புறம் நடந்ததை நீங்களே பாருங்க..!!
சமூக வலைதளங்களில் லைக்ஸ், பார்வைகள் மற்றும் ஃபாலோயர்களைப் பெறுவதற்காக மக்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் உச்சகட்டமாக, ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காகப் பெரிய காட்டுக்கரடி ஒன்றின் மிக அருகே சென்ற இளைஞரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவின் தொடக்கத்தில், ஒரு திறந்த வெளியில் ஒரு பெரிய காட்டுக்கரடி மிகவும் அமைதியாக நின்று கொண்டிருக்கிறது. அப்போது, ஒரு இளைஞர் கையில் கேமராவைப் பிடித்துக்கொண்டு மெதுவாக அந்த கரடியை நோக்கி நடக்கிறார். கரடி அமைதியாக இருந்ததால், நிலைமை தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என நினைத்துக்கொண்டு அவர் கரடிக்கு மிகவும் அருகிலேயே சென்று வீடியோ எடுக்கத் தொடங்குகிறார்.
ஆனால், அடுத்த சில நொடிகளில் நிலைமை தலைகீழாக மாறியது. அமைதியாக இருந்த அந்த காட்டுக்கரடி திடீரெனப் பாய்ந்து அந்த இளைஞரை நோக்கி மிக வேகமாக ஓடிவரத் தொடங்கியது. இதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக கேமராவைப் பிடித்தபடியே அலறியடித்து ஓட்டம் பிடிக்கிறார். ஓடும்போது கேமரா கடுமையாகக் குலுங்குவதால் அந்த இடத்தில் ஏற்பட்ட பதற்றத்தை வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது. ‘jamalk38’ என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், “சில நொடிகள் ஒளிபரப்பாகும் ரீல்ஸிற்காக உயிரைப் பணயம் வைப்பது முட்டாள்தனம்” என்று தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
