LATEST NEWS
அடச்சீ கொஞ்சம் கூட அறிவே இல்லையா..? மாணவர்கள் முன்பு சிறுநீர் கழித்த பள்ளி ஆசிரியர்.. இவனெல்லாம் மனுஷனா..? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சாம்பா மாவட்டத்தில் உள்ள டோங்காகோஹரௌத் அரசு தொடக்கப் பள்ளியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த புவனேஸ்வர் கௌஷிக் என்பவர், பள்ளி நேரத்தில் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் மற்றும் மாணவர்களின் முன்னிலையில் தனது பேண்ட்டைக் கழற்றி அசிங்கமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாணவர்கள் அவரிடம் சந்தேகம் கேட்கச் சென்றபோது, அவர் அவர்கள் முன்னிலையில் சிறுநீர் கழித்ததோடு, மாணவிகளைத் தவறான நோக்கத்துடன் அருகில் அழைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன சிறுமிகள் பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளனர்.
குழந்தைகள் கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்களும் கிராம மக்களும் உடனடியாகப் பள்ளிக்கு விரைந்தனர். அங்கு தலைமை ஆசிரியர் புவனேஸ்வர் கௌஷிக் அரை நிர்வாண நிலையில் நாற்காலியில் அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கிராம மக்கள் தங்களது மொபைல் போன்களில் அவரது இந்த நிலையைப் படம் பிடிக்கத் தொடங்கியதும், நிலைமையை உணர்ந்த தலைமை ஆசிரியர் பதற்றத்துடன் தனது ஆடைகளை அணிய முயன்றார். பெற்றோர்கள் எடுத்த இந்த வீடியோ ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டு, உடனடியாக அவசரக் காலப் பிரிவான டயல்-112 மூலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்கர் காவல் நிலைய போலீசார், கிராம மக்களின் பிடியிலிருந்த தலைமை ஆசிரியரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஜாஞ்ச்கிர்-சாம்பா மாவட்ட ஆட்சியர் உடனடியாக மாவட்ட கல்வி அதிகாரிக்கு விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்யவும், கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
