LATEST NEWS
“ஓபிஎஸ் வந்தாதான் பெரிய போஸ்ட்” திமுகவில் பொறுப்பு கிடைக்காமல் தவெகவுக்கு தூதுவிட்ட ரவீந்திரநாத்.. விஜய் தரப்பு போட்ட கறார் கண்டிஷனால் பரபரப்பு..!!
திமுகவில் இணைந்து ஐந்து மாதங்கள் கடந்தும் தனக்கு உரிய கட்சிப் பொறுப்பு எதுவும் வழங்கப்படாததால், முன்னாள் எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய தீவிர முயற்சிகளை மேற்கொண்டதாகவும், தவெகவின் முக்கிய நிர்வாகிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
எனினும், ஓ.பி.ரவீந்திரநாத் மட்டும் தனியாக வருவதை விட, அவரது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து வந்தால் மட்டுமே அரசியல் ரீதியாக அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்குப் பெரிய அளவிலான வாய்ப்புகளையும் முக்கியத்துவத்தையும் வழங்க முடியும் என தவெக தலைமை திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
